பாகிஸ்தானியர்கள் உதவி
டோரான்டோ:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள்நிதிவசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவிலுள்ள பாகிஸ்தான் - கனடா வர்த்தகக் குழுத் தலைவர் ஆன்டி மெர்சன்ட் கூறுகையில், இந்தியாவில்பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் நிதிவசூல் செய்து கொடுப்போம் என்றார்.
ஜெப்ஃரி கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அதன் தலைவர் ஜெப்ஃரி தொலைக்காட்சி ஒன்றில் 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றைவழங்கினார். அந்த நிகழ்ச்சியில் ஸ்கார்பாரோ முஸ்லீம் சங்கம் மற்றும் சில தனிப்பட்ட முறையில் அதிக அளவுநிதியதவி செய்தவர்களும் தோன்றி, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்என்று வேண்டுகோள் விடுத்தனர்.
தொலைக்காட்சியில் தோன்றி நிவாரண நிதி வேண்டுகோள் விடுத்த 25 பேரில் பெரும்பாலானவர்கள் கனடாவில்வாழும் பாகிஸ்தானியர்கள். இதுதவிர ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளருமான மசூத்கான் பிப்ரவரி 24 ம் தேதி நிதிவசூல் செய்வதற்காக விருந்து ஒன்று நடத்துகிறார்.
பிப்ரவரி 18 ம் தேதி கனடாவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஜானக் கேன்ட்ரி நடனநிகழ்ச்சி நடத்தி நிதிவசூல் செய்கிறார். இதில் கனடாவில் வாழும் பல பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications