மாதிரி நீதிமன்றங்கள் .. "சட்ட மாணவர்களுக்கு நல்ல பலன் தரும்
பாண்டிச்சேரி:
சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதிரி நீதிமன்றங்கள், மாதிரி நீதிமன்ற நடவடிக்கைகளில் பரிச்சயம்ஆகியவை நல்ல பலனைத் தரும் என்று பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் ரஜினி ராய் கூறினார்.
பாண்டிச்சேரிக்கு அருகே இருக்கும் காலாபேட்டையில் ரூ 19 கோடி செலவில் புதிய சட்டக் கல்லூரிக்கு அடிக்கல்நாட்டிய பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பேசுகையில், மாதிரி நீதிமன்றம் அமைத்து மாதிரி விவாதங்கள்நடத்துவது சிறந்த முறையில் வழக்கறிஞர்கள் உருவாக உதவும்.
இதேபோல, மருத்துவ சட்டக் கல்வியிலும் மாணவ, மாணவியருக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் கிறிஸ்டின் பாடார் கூறுகையில், பிரான்ஸ்,பாண்டிச்சேரியின் கல்வித் தரத்தை உயர்த்த எல்லா ஒத்துழைப்பும் தரும். குறிப்பாக சட்டக்கல்விக்கு பிரான்ஸ்முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருநாவுககரசு எம்.பி., வழக்கறிஞர்கள் மனித உரிமையை நிலைநிறுத்த பாடுபடவேண்டும் என்றார். பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் இந்த விழாவிற்கு தலைமை வகித்தார்.
யு.என்.ஐ.