ரயில் பயணம் இலவசம்
அகமதாபாத்:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்கள் அங்கிருந்து இலவசமாக ரயில் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதிக்குவேண்டுமானாலும் செல்லலாம் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் புதன்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து அவர், அகமதாபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்,இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இலவசமாகச் செல்லலாம். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால்சம்பந்தப்பட்ட ரயில்வே நிலைய ஸ்டேஷன் மாஸ்டரை அணுக வேண்டும்.
அங்கு கொடுக்கப்படும் இலவச பாஸ் மூலம் குஜராத் மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் செல்லலாம். இந்தஇலவச ரயில் பயணத் திட்டத்தைப் பெரும்பாலான மக்கள் தவறாகப் பயன்படுத்தலாம். இருப்பினும் குஜராத்மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இலவச ரயில் பாஸ் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றுநம்புகிறேன்.
இதனால் ரயில்வே துறைக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். அதை சமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே ஊழியர்களை நம்பி வாழும்6,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பூஜ் ரயில்வே நிலையம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை சீரமைப்பது குறித்தும்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications