For Quick Alerts
For Daily Alerts
Just In
பா.ம.க. அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு
டெல்லி:
மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பாட்டாளி மக்கள் கட்சி அமைச்சர்கள் என்.டி.சண்முகம்,பொன்னுச்சாமி ஆகியோரின் ராஜினாமாக்களை பிரதமர் வாஜ்பாய் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இரு அமைச்சர்களும் 5-ம் தேதி தங்களது ராஜினாமாக் கடிதங்களை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தனர். அதன்பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சி வாபஸ் பெற்றுக்கொண்டது.
செவ்வாய்க்கிழமை அதிமுக கூட்டணியுடன் பா.ம.க. சேர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]