For Daily Alerts
Just In
ரஷ்யாவும் தத்தெடுக்கிறது
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 400 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ரஷ்யா தீர்மானித்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை, ரஷியாவின் கருங்கடல் பகுதியில் சிறப்பு முகாம்களில் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள்தங்க வைக்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.
ரஷ்ய அரசு நிறுவனமான ரோஸ்போரா எக்ஸ்போர்ட் நிறுவனம் இதுதொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிக்கையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட400 குழந்தைகளை ரஷ்யா தத்தெடுக்கத் திட்டமிட்டுள்ளது. 7 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கவுள்ளோம்.
இவ்வாறு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் 30 முதல் 60 நாட்கள் வரை முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். இந்தக் குழந்தைகளை ரஷ்யாவுக்குக்கொண்டு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் ரஷ்யாவே பார்த்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
Story first published: Wednesday, February 7, 2001, 5:30 [IST]