காங்கிரஸை விலகக் கோருகிறார் சுவாமி
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க இணைந்ததால் காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோரினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனதாக்கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி, விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களான பா.ம.க. இருக்கும் கூட்டணியில்காங்கிரஸும் இருந்தால் புலிகளை சோனியா ஆதரிப்பது போலாகும்.
மத்திய அரசிலிருந்து பா.ம.க. மந்திரிகள் விலக அக்கட்சியின் விடுதலைப்புலிகள் ஆதரவுப் போக்கே காரணமாகும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளஅக்கட்சியினால் மத்திய அரசிற்கு சங்கடமான நிலை உருவானதால் அக்கட்சி விலகியுள்ளது.
வாழப்பாடியின் த.ரா.கா.வினுடனான பா.ம.க மோதல் இவ்விலகலுக்கு காரணமில்லை.
மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணிவதற்கு சாத்தியமில்லை. ஏனெனில், தற்போதைய நிலையில் மூப்பனார் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கவேவிரும்புகிறார் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications