போலீஸ் பிடியில் ஜெயா டி.வி. நிருபர், கேமரா மேன்
சென்னை:
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் வீட்டைப் படம் எடுக்க முயன்ற ஜெயா டி.வி. நிறுவன செய்தியாளரைபோலீஸார், தடுத்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவருடன் சேர்த்து டி.வி. கேமரா மேனும்போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து ஜெயா டி.வி நிறுவனத் தரப்பில் கூறுகையில், மேயர் மு.க.ஸ்டாலின வருமானத்திற்கு மீறிய வகையில்,சொத்து சேர்த்ததாக சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திக்காக மேயரின் வீட்டை படமெடுக்க செய்தியாளரும், வீடியோ கேமராமேனும்அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், ஜெயா டி.வி செய்தியாளரும், கேமராமேனும் கைதுசெய்யப்படவில்லை. போலீஸ் வசம்தான் அவர்கள் உள்ளனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள்விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜெயா டிவி, அதிமுக எம்.பி தினகரனால் நிர்வகிக்கப்படுகிறது. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழிசசிகலாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications