தொழில் நுட்பம் உதவுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை:

தகவல் தொழில் நுட்பம் மூலம் இந்தியாவில் பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிய வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

மும்பையில் "நாஸ்காம் 2001 என்ற தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், தகவல் தொழில் நுட்பம் மிகப்பெரியவளர்ச்சி அடைந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் பூகம்பம் ஏற்படக் கூடிய பகுதிகளைக் முன்கூட்டியே கண்டறியவேண்டும்.

இதன் மூலம், பூகம்பம் ஏற்படும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். இதற்குத் தகவல் தொழில்நுட்பத் துறைவல்லுநர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

நாஸ்காம் அமைப்பின் தலைவர் தேவாங் மேத்தா கூறுகையில், தங்களது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் குஜராத்தில் பூகம்பத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ 5 கோடி முதல் 25 கோடி வரை நிதிவசூல் செய்து கொடுக்க உள்ளோம் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+