மீண்டும் ஒரு புலி படு கொலை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திராவில் உள்ள புலிகள் சரணாலயத்தில் பெண் புலி ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது.

ஹைதராபாத்திலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள நாகார்ஜூனசாகர்-ஸ்ரீசைலம் புலிகள் சரணாலயத்தில் புலியின் குரல்வளையை அறுத்து கொன்றதுடன் அதன்கால்களில் மூன்றை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம்தான் இங்குள்ள ஒரு வயது புலிக்குட்டி ஒன்று தோலுரிக்கப்பட்டு இறந்து கிடந்தது. அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள்இன்னும் பிடிபடவில்லை. இதனிடையே, இச்சம்பவத்திற்காக அருகிலுள்ள கிராமத்தவர்களில் 20 பேர் வரை விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் பி.கே.சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புலியை கொன்றவர்கள் புலியின் தோலை விட்டுச்சென்றிருப்பதால் அதனை உள்ளூர் மக்கள் அல்லது மற்றவர்கள்தான் கொன்றிருக்க வேண்டும். புலிவேட்டைக்காரர்களின் செயல் அல்ல இது என்று சரணாலயத்தின் இயக்குநர் எம்.பிரிதிவிராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம்தான் ஒரு சிறுத்தை கொல்லப்பட்டு அதன் தோலுரிக்கப்பட்டு இருந்தது. 1993லிருந்து தற்போது வரை 39புலிகள் கொல்லப்பட்டுள்ளது என்றார்.

4500 ச.கி.மீ பரப்பளவில் 5 மாவட்டங்களில் பரவியுள்ள இச்சரணாலயத்தில் 400 பேர் கொண்ட சரணாலய பாதுகாப்புப்படையிருந்தும் வேட்டைக்காரர்களைபிடிக்க முடியவில்லை. இங்குள்ள சிறுத்தை, மான் போன்றவை அடிக்கடி கொல்லப்பட்டு அருகிலுள்ள கிராமங்களில் விற்கப்படுகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+