சோனியாவைச் சந்திக்கிறார் மூப்பனார்
டெல்லி:
அ.தி.மு.க.கூட்டணியில் பா.ம.க சேர்ந்துள்ளதால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்துசோனியா காந்தியுடன் விவாதிக்க மூப்பனார் டெல்லி விரைகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்தலைவர்களானகுலாம் நபி ஆசாத், அனில் சாஸ்திரி ஆகியோருடன் தமிழக நிலை குறித்துவிவாதித்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்பரசு மற்றும் ராஜேசுவரன் தவிர மற்ற தலைவர்கள்அனைவரும், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களான பா.ம.க சேர்ந்துள்ள அ.தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகி மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுவதின் சாதகபாதகங்கள் குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
கூட்டத்திற்குப்பின் நிருபர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெள்ளியன்று சோனியா காந்தியை சந்தித்து தங்கள்கருத்துகளை தெரிவித்த பின் சோனியா காந்தி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்என்றார்.
குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் பேசியபோது ஜெயலலிதாவுடன் உடனடியாக பேச்சுநடத்தும் திட்டமில்லை என்றார்.
இதனிடையே, டெல்லியிலிருந்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மூப்பனாருடன்தொடர்பு கொண்டு விடுத்த அழைப்பை ஏற்று ஜெயந்தி நடராஜன் எம்.பி.யுடன்டெல்லி சென்று, வெள்ளிக்கிழமை சோனியாவை சந்தித்து பேச உள்ளார் மூப்பனார்.
புதுவை காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் சண்முகம், எம்.ஓ.எச்.பாரூக் மரைக்காயர்,வி.நாரயணசாமி ஆகியோர் வியாழக்கிழமை சோனியா காந்தி, மற்றும் மேலிடத்தலைவர்களை சந்தித்து கூட்டணிகுறித்து விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications