தீவிரவாதிகள் தாக்குதலில் 13 பேர் சாவு
கெளஹாத்தி:
அசாமில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டு சம்பவங்களில் 9 போலீசார் உள்பட 13பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் செய்தி தொடப்பாளர் கூறுகையில், கெளஹாத்தியிலிருந்து 325கிலோமீட்டர் தொலைவிலுள்ள காச்சார் மாவட்டத்தில் போலீசார் இரண்டுவாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மலை உச்சியிலிருந்து தோஹா (டி.எச்.டி.) தீவிரவாதிகள் இவர்களைநோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர் இதில் 9 போலீசார் கொல்லப்பட்டனர் 3 பேர்காயமடைந்தனர்.
போலீசார் மீது குண்டுமழை பொழிந்தது போல் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடுநடத்தியதால் போலீசாரால் பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை என வடக்குகாச்சாரின் காவல் துறை கண்காணிப்பாளர் சின்ஹா தெரிவித்தார்.
1993-ம் ஆண்டு முதல் டிமாஸ் மலைபகுதி மக்களுக்கு தனி நாடு கேட்டு டி.எச்.டி.தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். ராணுவ மற்றும் புறக்காவல் படையினர்இவர்களை தேடி,பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றோரு சம்பவத்தில் காப்ரி அனலாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் குகிதீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 4 பேரை கொன்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலால் கடந்த இரண்டு வருடங்களில் 10,000க்கும் அதிகமானமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications