தகனம் செய்யப்பட்டார் திருச்சி மேயர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழகத்தின் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய, மறைந்த திருச்சி மாநகராட்சி மேயர் புனிதவல்லி பழனியாண்டியின் உடல் ஞாயிற்றுக்கிழமைதகனம் செய்யப்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று மரணமடைந்த இவரது உடல் சனிக்கிழமை மாலைசென்னையிலிருந்து, திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் கே.என்.நேரு, எதிர்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்டக் கலெக்டர் மூர்த்தி, திருச்சிபோலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் அடைக்கலராஜ் எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications