வாக்காளர் பட்டியலில் குழப்பம் .. அதிமுக புகார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் குனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள 150 வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து முறையாகவிசாரணை நடத்த வேண்டும் என்று பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தலைவருமான ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் பாண்டிச்சேரி தேர்தல் அதிகாரி விஜயனுக்கு எழுதியுள்ள கடித விவரம்:
பாண்டிச்சேரியில் குனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள 150 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த 150வாக்காளர்களும் குனிச்சம்பட்டு கிராமத்தில்தான் வசித்து வருகிறார்கள். அதற்கான ஆதாரமும் உள்ளது.
இங்கு இவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்திஇவர்களின் பெயர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் ராமச்சந்திரன்.
யு.என்.ஐ.