லாரி மீது மோதிய ரயில்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற லாரி மீது, ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படு காயமடைந்ந்தனர்.
கடலூர் முதுநகருக்கு அருகே இருக்கும் காரைக்காடு என்ற இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவாரிலிலிருந்து, கிராவல் ஏற்றிக் கொண்டு லாரிஒன்று பாண்டிச்சேரிக்கு கிளம்பியது.
இந்த லாரி சீதாக்குப்பம் என்ற இடத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது, அப்போது சேலத்திலிருந்து கடலூர் முதுநகருக்கு வந்து கொண்டிருந்தரயில் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரி நொறுங்கியது.
இந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் முருகன் (25), கிளீனர் மணிகண்டன் (20) இருவரும் படுகாயமடைந்தனர். முருகன் குச்சிப் பாளையத்தை சேர்ந்தவர். மணிகண்டன்பூண்டியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் சிகிச்சைகாக கடலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications