சாலஞ்சர் கிரிக்கெட் .. சென்னையில் இன்று ஆரம்பம்
சென்னை:
சாலஞ்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் திங்களன்று தொடங்குகிறது.
நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாகும். கங்குலி தலைமையிலான இந்திய சீனியர் அணி , ராகுல் திராவிட் தலைமையிலானஇந்திய ஏ அணியை முதல்நாள் ஆட்டத்தில் சந்திக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் மற்றொரு அணி ராபின் சிங் தலைமையிலான இந்திய பி அணி.
சீனியர் அணி: கங்குலி (கேப்டன்), எஸ்.எஸ்.தாஸ், யுவராஜ் சிங், பதானி, லஷ்மண், வீரேந்திர சேவக், விஜய் தஹியா, ஆஷிஷ் கபூர், மொஹந்தி, ஸ்ரீநாத், ஜாகிர் கான்மற்றும் சுனில் ஜோஷி.
இந்திய ஏ அணி: திராவிட்(கேப்டன்), எஸ்.ரமேஷ், ஸ்ரீராம், ஜேகப் மார்டின், ரிதிந்தர் சிங் சோதி, கனிட்கர், நயன் மோங்கியா, வெங்கடேஷ் பிரசாத்,அகர்கர், இக்பால் சித்திக், ராகுல் சாங்வி, மற்றும் பாலாஜி ராவ்.
இந்திய பி அணி: ராபின் சிங்(கேப்டன்), டெண்டுல்கர், ஜே.பி.யாதவ், முகமது ஹைப், தினேஷ் மோங்கியா, அமய் குரேஷியா, நிகில் சோப்ரா, ராகேஸ்படேல், சுரிந்தர் சிங் பகால், சுக்விந்தர் சிங், தோடா கணேஷ், மற்றும் விக்ரம் ரதோர்.
செவ்வாயன்று இந்திய சீனியர் - இந்திய பி அணி இடையேயான ஆட்டமும், புதனன்று இந்திய ஏ அணி - இந்திய பி அணி இடையேயான ஆட்டமும்,வியாழனன்று இறுதிப் போட்டியும் நடைபெறும்.