பூகம்பத்தால் பாதிக்கப்படாத மின் விநியோகம்
Subscribe to Oneindia Tamil
ஆனந்த் (குஜராத்):
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களிலும் மின்சப்ளை பாதிக்கப்பட்டாலும் காந்திதாமில் ஒரு இடத்தில் மட்டும் மின்விநியோகம்பாதிக்கப்படவில்லை. அது தேசிய பால்வள வாரியக் குடியிருப்பு.
இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் நிதியுதவியால், ஆராய்ச்சிக்காக காந்திதாம், வல்லப வித்யா நகரில், சர்தார் படேல் மரபுசாரா எரிசக்திஆராய்ச்சி நிலையம் 3.6 கிலோ வாட் திறனுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவியது.
இதிலிருந்து தேசிய பால்வள வாரியக் குடியிருப்புக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. கட்ச் பகுதி முழுவதும் மின்சப்ளை பாதிக்கப்பட்டாலும் தேசிய பால்வளவாரியத்தின் பூகம்ப மீட்பு நடவடிக்கைகள் பாதிப்பின்றி தொடர்ந்ததற்கு காரணம் இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையமாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications