காஷ்மீர் சீக்கியர்களுக்கு உதவுவோம்...ஹூரியத்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் வாழும் முஸ்லீம் சகோதரர்களோடு வாழ சீக்கியர்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஹூரியத்அமைப்பினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
திங்களன்று ஹூரியத் தலைவர்களுடன் சீக்கிய சிரோன்மனி அகாலிதளத்தின் (டோஹ்ரா பிரிவு) ஜி.எஸ்.டோஹ்ரா, அகில இந்திய சீக்கிய மாணவர் அமைப்பின்தலைவர் ஹர்மிந்தர் சிங் ஜில் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டத்திற்குப்பின் பேசிய ஹூரியத்தின் தலைவர்களுள் ஒருவரான ஷபீர் அகமது ஷா கூறுகையில், எங்களுடைய காஷ்மீர் போராட்டத்தில் சீக்கியர்கள்உதவவில்லையென்றாலும் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம். காஷ்மீரிலிருந்து இடம் பெயரும் முடிவை கைவிட காஷ்மீர் சீக்கியர்கள்முடிவு செய்துள்ளனர். முஸ்லீம் சகோதரர்களோடு இங்கு குடியிருக்க அவர்களுக்கு உரிமையுண்டு என்றார்.
மற்றொரு தலைவரான யாசின் மாலிக் கூறுகையில், சீக்கியர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். என்உடலை தாண்டி வேண்டுமானால் அவர்கள் செல்லட்டும் என்றார்.
சீக்கியர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தருவதாக கூறிய ஹூரியத் தலைவர்கள் கடந்த வாரம் கொல்லப்பட்டசீக்கியர்களுக்காக ஞாயிறன்று குருத்வாராவில் நடைபெற்ற மத சடங்குகளில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், சீக்கியர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக
தெரிவித்தார்.ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications