வீரப்பன் மறைவிடத்திலிருந்து தோட்டாக்கள் பறிமுதல்
கோவை:
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள வாளையார் காட்டுப் பகுதியில் வீரப்பன் தலைமறைவாக இருக்கும் பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக, கர்நாடக அதிரடி படையின் தேடுதல் வேட்டைக்குப் பின்னும் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் இன்னமும் தமிழக - கேரள எல்லையில்இருக்கும் வாளையர் காட்டு பகுதியில் தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் வீரப்பன் கூட்டாளிகளுடன் சண்டை நடந்த இடத்திற்கு வாளையார் போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கிருந்து 4துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பையும், 5 ஜோடி செருப்புகளும் கைப்பற்றப்பட்டன.
சிறப்பு அதிரடிப் படையினர் சின்னம்பதி, சிறுவாணி மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவாணி அருகே தண்ணீர்குடிக்க வந்த யானைக் கூட்டத்தை நேருக்கு நேர் பார்த்த பின் தேடுதல் வேட்டை தடைபட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பின் அதிரடி படை வீரர்கள் மீண்டும்அடர்ந்த காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.
சிறப்பு அதிரடிபடை வீரர்களின் குழு ஒன்று நீலகிரி மலைக்கு சென்றது. அப்போது அவர்கள் சென்ற வேன் பிரேக் பிடிக்காத காரணத்தால் கட்டுப்பாட்டைஇழந்து தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் இருந்த மரத்தில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உ.யிர் தப்பினர். சிலருக்கு சிறு காயங்கள்மட்டும் ஏற்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications