காதலர் தினம் .. கான்பூரில் தாக்குதல்
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்றுக் கொண்டிருந்த கடைகள் மீது இந்து வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர்.
கான்பூரில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதே போல் லக்னோவிலும் பல கடைகளில் தாக்குதல் நடத்திகாதலர் தின வாழத்து அட்டைகளைப் பறித்துச் சென்றனர்.
லக்னோவை அடுத்துள்ள ஹஸ்ரத்கஞ்ச்சில் உள்ள பல கடைகளை வலது சாரி அமைப்பினர் வலுக்கட்டாயமாக மூட வைத்தனர். ஹஸ்ரத்கஞ்ச்சில் உள்ள ஆர்ச்சீவ்ஸ்மற்றும் ஹால்மார்க் காலரிகளை பஞ்ரங் தள் மற்றும் இந்து ஜாக்ரான் மான்ஞ்ச் அமைப்பினர் ஆகியோர் கடைகளை மூடக் கோரி பலவந்தப்படுத்தினர்.
இது தவிர வலது சாரி அமைப்புக்களான பஞ்ரங் தள் மற்றும் இந்து ஜாக்ரான் மான்ஞ்ச் அமைப்பினர் புதன்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும்காதலர் தினம் கொண்டாட விட மாட்டோம். கொண்டாடினால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளனர் என்றனர்.
ஹால்மார்க் கேலரி உரிமையாளர் சந்தர் பிரகாஷ் கூறுகையில், காவி நிற பேனர்களை வைத்துக் கொண்டு வலது சாரி அமைப்பினர் எங்கள் கடையை நோக்கிவந்தனர். கடையை உடனடியாக மூடவில்லையென்றால் உடனடியாகத் தாக்குதல் நடத்துவோம் என்றனர். இதையடுத்து நாங்கள் கடையைப் பூட்டிவிட்டோம்.












Click it and Unblock the Notifications