For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயோ வில்லேஜூக்கு நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள பயோ வில்லேஜ்களுக்கு அதிக நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்என்று ஐ.நா.அதிகாரி மார்க் மாலக் தெரிவித்தார்.

ஐ.நா.அதிகாரி (யு.என்.டி.பி) மார்க் மாலக் பிரவுன் வியாழக்கிழமை பாண்டிச்சேரி வந்து சேர்ந்தார். இவர்பாண்டிச்சேரி நிர்வாகத்தை அந்த பகுதியின் மனித வள மேம்பாட்டு குறித்த அறிக்கையை தயாரித்து தருமாறுகோரியுள்ளார்.

நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

அந்த அறிக்கையை தயாரிக்க யுஎன்டிபி நிதி உதவி செய்யும். யு.என்.டி.பி-யால் நிதி உதவி செய்யப்பட்டுதுவக்கப்பட்ட சுவாமிநாதன் ஆய்வு கழகத்தின் பயோ வில்லேஜ்களை பார்வையிட்டேன். அது மிகப் பெரும்வெற்றி பெற்றுள்ளது.

யுஎன்டிபி. பயோ வில்லேஜ்களை மேம்படுத்த 20 மில்லியன் டாலர் அளவுக்கு மேலும் நதி உதவி செய்யவுள்ளது.வில்லியனூரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களின் முன்னேற்றதிற்காக அமைக்கப்பட்டுள்ள அறிவுமையத்தையும்பார்வையிட்டேன் என கூறினார்.

இவர் முன்னதாக பாண்டிச்சேரியின் துனை நிலை ஆளுநர் ரஜினிராயையும், முதல்வர் சண்முகத்தையும், முதன்மைசெயலாளர் ஜோசப்பையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X