மாறன் கைது .. ஜெ. புது சந்தேகம்
சென்னை:
சிறுவாணி காட்டுப் பகுதியில் இருந்து சந்தனக் கடத்தல் வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இந்தஉண்மையை போலீஸார் மிகவும் தாமதமாக வெளியிடுகிறார்கள் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விடுதலைப்படையின் தலைவராகவும், வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியாகவும் விளங்கியவர் மாறன். இவரைப் போலீஸார் பிப்ரவரி 2 ம் தேதியேகைது செய்யப்பட்டு விட்டார்.
ஆனால் இந்தத் தகவலை உடனடியாக வெளியிட வேண்டாம் என்று அவர்களுக்குள்ளேயே தீர்மானித்து பிப்ரவரி 15 ம் தேதி கைது செய்ததாகக்கூறியுள்ளார்கள்.
வீரப்பனுடன் பேரம் பேசி மாறனைக் கைது செய்வது போல் நாடகம் அரங்கேற்றியிருக்கிறார் கருணாநிதி. தற்போது போலீஸார் வசம் உள்ள மாறனைஅவர்கள் இதுவரை விசாரணை நடத்தவில்லை. இதுவும் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications