பெங்களூர் வந்தார் சோனியா
பெங்களூர்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தமிழகம் செல்லும் வழியில் பெங்களூருக்கு வந்தார்.
தமிழகத்தில் மயிலாடுதுறையில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியிலிருந்து தமிழகம் செல்லும் வழயில்சனிக்கிழமை காலை பெங்களூர் வந்தார்.
அவரை விமான நிலையத்தில் முதல்வர் கிருஷ்ணா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் கெளஜலகி மற்றும் கட்சி தலைவர்கள் விமான நிலையத்தில்வரவேற்றனர். சோனியா காந்தி விமான நிலையத்திலிருந்து ராஜ்பவன் சென்றார். அங்கு அவர் கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.
அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவர் மயிலாடுதுறை செல்கிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் மீண்டும் மாலை பெங்களூர் வந்துஅதன் பின் அவர் டெல்லி செல்கிறார். சோனியாவின் வருகையையொட்டி பெங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications