வீரப்பன் தோளில் குண்டு பாய்ந்ததா?
கோவை:
வாளையார் காட்டில் அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் வீரப்பனின் தோளில் குண்டு பாய்ந்தது. அவர்உயிர் தப்பியதே அதிசயம் என்று அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட மாறன் தனது வாக்குமூலத்தில்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ராஜ்குமாரை விடுவித்த பிறகு, அதிரடிப்படையினர் எங்களை தேடத் துவங்கியதால், ஈரோடு வனப்பகுதியில்இருந்து தப்பித்தோம்.
கேரளா செல்வதற்காக சிறுவாணி காட்டுப்பகுதி வழியாக வாளையார் பகுதிக்கு வந்தோம். அப்போது எங்களைபார்த்த அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது வீரப்பனின் வலது தோள் பட்டையில் குண்டுபாய்ந்தது. அதிரடிப்படை தாக்குதலில் இருந்து வீரப்பன் தப்பியதே பெரிய அதிசயம்.
ஏனெனில் அன்று வீரப்பன் மார்பில் குண்டு பாய்ந்திருந்தால் அவர் இறந்திருப்பார். அதிரடிப் படையிலிருந்துதப்பித்த வீரப்பனும் நாங்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தப்பித்து விட்டோம்.
நான், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, ஆலப்பாக்கம் முருகேசன் உள்பட 7 பேர் தனியாகப் பிரிந்து சென்றோம். வீரப்பன்கும்பலிடம் மட்டுமே துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளன. எங்களிடம் எதுவும் கிடையாது என்று தனதுவாக்குமூலத்தில் கூறினார் மாறன்.
ஐ.ஏ.என்.எஸ்.