மதுரை அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ரூ 35,000 கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கும் விளாங்குடியிலுள்ளபெட்ரோல் பங்குக்கு 4 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை காலை அரிவாளுடன் நுழைந்தது.
அவர்கள் அங்கிருந்த ஊழியர் சுப்ரமணி (51) என்பவரை தாக்கினர். பின் காஷியரை மிரட்டி அவரிடமிருந்த ரூ35,000-த்தை கொள்யைடித்துக் கொண்டு ஓடி மறைந்தனர். சுப்ரமணியத்திற்கு தலையிலும், கையிலும் காயம்ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்கிலிருந்த கை ரேகைகளை பதிவு செய்யப்பட்டுள்ளது. மோப்ப நாய்களும் பணியில்ஈடுபடுத்தப்பட்டது என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications