படையாச்சி சிலையை கருணாநிதி ஏன் அவரசமாய் திறந்தார்?
சென்னை:
சென்னையில் ராமசாமி படையாச்சியின் சிலையை தமிழக முதல்வர் அவசரகதியில் திறந்ததாக பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. பு.தா.இளங்கோவன் குற்றம்சுமத்தியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், பாட்டாளி மக்களின் தலைவரான ராமசாமியின் சிலை திறக்கப்பட்டதை பாட்டாளி மக்கள் கட்சிவரவேற்கிறது.
ராமசாமி படையாச்சி சிலையை திறக்க பா.ம.க. நீண்ட நாட்களாக கோரி வந்தது. திறப்பு விழாவிற்கு வன்னிய இனத்தை பற்றி கவலைப்படாததலைவர்களையெல்லாம் அழைத்து சிலை திறப்பு விழா நடத்தியுள்ளார் கருணாநிதி.
ஆனால், வன்னிய இனத்தின் தற்போதைய ஒரே தலைவரான டாக்டர் ராமதாஸை அழைக்கவில்லை.வன்னிய ஓட்டுக்களை பெறவேண்டும்என்பதற்காக இவ்விழா அவசரகதியில் நடைபெற்றாலும் ஒரு வன்னியர் கூட தி.மு.க.விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள்.
பா.ம.க.தலைவர் டாக்டர்.ராமதாஸின் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில் மாநில அரசு அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க மறுத்து வருகிறது எனகுற்றம்சாட்டினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications