இந்தியா வருகிறார் இலங்கை அதிபர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

சார்க் அமைப்பின் தலைவரும் இலங்கை அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா வெள்ளிக்கிழமை இந்தியாவருகிறார்.

இந்தியா வரும் சந்திரிகா, சார்க் மாநாட்டை விரைவில் நடத்துவது குறித்து இந்திய பிரதமர் வாஜ்பாயுடன்விவாதிக்க உள்ளார் என இலங்கை வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்று வந்த நிலையில்சந்திரிகாவின் இந்திய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சார்க் மாநாட்டை ஒட்டி வாஜ்பாயும், பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வீஸ் முஸாரப்பும் சந்தித்துபேசக் கூடும்.

1998ம் ஆண்டு சார்க் மாநாட்டையொட்டி பாகிஸ்தான் பிரதமரும் இந்திய பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கின.

கார்கில் போர் போன்ற சூழ்நிலைக்குப்பின் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளராக முஸாரப் பதவியேற்ற போதுஇருந்த நிலை தற்போது மாறியுள்ளது.

குஜராத் பூகம்பத்தையொட்டி இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசிக் கொண்டனர். இதனால், சார்க்மாநாட்டை முன்னதாக நடத்த இரு நாடுகளும் ஒத்துக்கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+