அங்கன்வாடி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் அங்கன்வாடி தொழிலாளர்கள் தாங்கள் நடத்தி வந்த போரட்டத்தைவாபஸ் பெற்றுள்ளனர்.
அங்கன்வாடி தொழிலாளர்கள் இந்த மாதம் 13-ம் தேதி முதல் தங்கள் நிபந்தனைகளைநிறைவேற்ற கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள்சட்டசபையின் முன்மும் மறியலில் ஈடுபட்டனர்.
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கல்வித் துறையில் இருக்கும் பகுதிநேரகாலியிடங்களில் 25 சதவிகித இடங்களை அங்கன்வாடி தொழிலாளர்களுக்குஒதுக்குவதாக கூறியதையடுத்து 10 நாட்களாக நடந்து வந்த வேலை போராட்டத்தைவியாழக்கிழமை வாபஸ் பெறுவதாக அங்கன்வாடி தொழிலாளர்கள் கூறினர்.
முதல்வரின் வீட்டின் முன் மறியலில் ஈடுபட முயன்ற 600 அங்கன் வாடிதொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கைதான பின்பும் காவல்நிலையம் செல்ல மறுத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வரமாட்டோம்என மறுத்தனர்.
முதல்வர் சண்முகம் உத்தரவாதம் அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
யு.என்.ஐ.