எய்ட்சுக்கு மருந்து ரெடி?
லண்டன்:
கிளாஸ்கோ மற்றும் ஸ்மித்க்ளைன் நிறுவனத்தார், தாங்கள் தயாரித்துள்ள எய்ட்ஸ் நோய்த் தடுப்பு மருந்தை இந்த வருட இறுதியில் மனித உடலில் செலுத்திபரிசோதனை செய்து பார்க்கவுள்ளதாகத் திட்டமிட்டுள்ளனர்.
எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் இந்தத் தடுப்பு மருந்தை ஏற்கனவே குரங்கிற்குச் செலுத்தி பரிசோதனை செய்து பார்த்த பின் தற்போது மனித உடலில்செலுத்தி பரிசோதிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, அமெரிக்க போதைத் தடுப்பு குழுவின் கீழ் செயல்படும் நோய்க்கொல்லி ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் ஜீன் ஸ்டீபன் கூறியதாவது:
எய்ட்ஸ் நோயைத் தடுப்பது மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்றுவது போன்றவற்றிற்காக நாங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளோம். இந்தத் தடுப்பு மருந்தை இந்த வருட இறுதியில் மனித உடலில் செலுத்தி பரிசோதித்துப் பார்க்க உள்ளோம்.
எச்.ஐ.வி மற்றும் எட்ய்ஸ் நோய்க்கு அதிக அளவு மருந்துகள் விற்பனை செய்யும் ஜி.எஸ்.கே நிறுவனத்தாறும் எய்ட்ஸ் நோயைக் குணப் படுத்துவதற்காகநாங்கள் தயாரித்துள்ள மருந்தைப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். முதலில் நாங்கள் தயாரித்துள்ள மருந்தை எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்க உள்ளோம்.
ஜி.எஸ்.கே நிறுவனத்தார் தற்போது எய்ட்ஸ் நோய்க் கிருமியைக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமின்றி உலகம் எங்கிலும் பரவியிருக்கும் 25 விதமானநோய்களைக் குணப்படுத்தும் பல நோய் தடுப்பு மருந்துகளை பரிசோதித்துப் பார்த்துள்ளனர்.
தற்போது அடுத்த முயற்சியாக எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்தை மனித உடலில் செலுத்தி பரிசோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்தப் புதிய மருந்தைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு சாதாரண மருந்துகளை உட்கொள்வது போன்றே உணர்வு இருக்கும். ஆனால் உடல் முழுவதும்நோய் பரவுவதற்குள் இந்த மருந்தை சாப்பிடுவதால் குணம் பெறலாம்.
2002 ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தத் தடுப்பு மருந்தைப் பரிசோதித்துப் பார்க்கத் தொடங்குவோம். அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து, அதாவதுபரிசோதனை குறித்து கிடைக்கும் முடிவைப் பொறுத்து 2003 ம் ஆண்டு மத்தியில் தடுப்பு மருந்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில்அறிமுகப்படுத்தப்படும்.
எய்ட்ஸ் நோய் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பிற நிறுவனமான வாக்ஸ் ஜென் இன்க், எய்ட்ஸ் வாக்ஸ் என்ற தடுப்பு மருந்தைத் தயாரிப்பது குறித்து ஆலோசித்துவருகிறது.
இதுதவிர மெர்க் அன்ட் கோ மற்றும் அவான்டிஸ் எஸ்.ஏ. ஆகிய நிறுவனங்களும் எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றன என்றார்ஸ்டீபன்.












Click it and Unblock the Notifications