இங்க வாங்க...இங்க வாங்க: கண்ணப்பனை இழுக்கும் தொண்டர்கள்
சென்னை:
மக்கள் தமிழ் தேசக் கட்சியின் சார்பில் தங்கள் தொகுதியில் போட்டியிடக் கோரி சுமார் 30 பேர் முன்னாள்அமைச்சர் கண்ணப்பனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இந்தக் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருபவரும் கண்ணப்பன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. யாதவசமூகத்தினரின் வாக்குகளை நம்பித் துவக்கப்பட்டுள்ளது இக் கட்சி.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினரிடமிருந்துவேட்பு மனுக்களைப் பெறுவதில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.
ஜாதிக் கட்சியாக இருந்து தேர்தலையொட்டி அரசியல் கட்சியாக மாறிய மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும்மக்கள் தமிழ் தேசக் கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் தங்களது தொண்டர்களிடமிருந்துவேட்பு மனுக்களைப் பெற்று வருகின்றன.
மதுரை உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளதாகக் கருதப்படும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்சார்பில் போட்டியிட இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மனுச் செய்துள்ளனர். இக்கட்சியின் சென்னை, மதுரை,நெல்லை அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
சென்னையில், கட்சி நிறுவனரும், தலைவருமான டாக்டர் சேதுராமன் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்கிறார்.மேலூர், ஆத்தூர், திண்டுக்கல், காரைக்குடி, திருப்பத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சமயநல்லூர், வாசுதேவநல்லூர், அரூர்,செஞ்சி, ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட இதுவரை விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கட்சிவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 3-ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணப்பனுக்காக 30 மனுக்கள்:
யாதவ சமூக வாக்குகளை நம்பித் துவக்கப்பட்டுள்ள மக்கள் தமிழ் தேசக் கட்சி சார்பில் அக்கட்சித் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.கண்ணப்பன் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் கோரி அவரதுகட்சியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் இந்தியன் வங்கித் தலைவருமான எம்.கோபால கிருஷ்ணன்புவனகிரி தொகுதியில் போட்டியிடக் கோரி சிலர் மனு செய்துள்ளனர்.