மாஸ்கோ மாணவர்கள் குஜராத்துக்காக நிதி வசூல்
மாஸ்கோ:குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காகமாஸ்கோவில் உள்ள இந்திய பள்ளி மாணவர்கள் நிதி வசூல் செய்து வருகின்றனர்.குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தில் 25, 000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். கோடிக் கணக்கில் பொருட்கள் சேதம்அடைந்தன.
தற்போது குஜராத் மக்களுக்கு உதவி செய்யும் வண்ணம் நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபட்டு வருகின்றன. இவர்கள்தனிநபர் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதி வசூல் செய்து முடித்த பின் தற்போது பல நிகழ்ச்சிகள் நடத்தி நிதி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக, மாணவர்கள் இந்திய வகை உணவுகளை தங்கள் வீடுகளில் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைகுஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள்.
சர்வதேச ஸ்கவுட் மற்றும் கைட்ஸ் டே கொண்டாடியும் மாணவர்கள் நிதி வசூல் செய்து வருகின்றனர்.
மேலும் சிந்திக்கும் தின விழா கொண்டாடி அவர்கள் நிதி வசூல் செய்தனர். சிந்திக்கும் தினத்தைத் தொடங்கி வைத்த இந்தியப் பள்ளியான கேந்திரியவித்யாலயா முதல்வர் சர்மா கூறுகையில், பள்ளிக்கூடங்களில் நடக்கும் ஸ்கவுட் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
தற்போது, குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காரி - காமாய் என்ற நிகழ்ச்சிகளை நம் பள்ளிக் குழந்தைகள்நடத்துவது மிகவும் சந்தோஷத்துக்குரியது.
பள்ளி மாணவர்கள், குஜராத்தில் வாழும் மக்களின் நலனிற்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு நடத்தும் இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் சந்தோஷப்படவைக்கிறது என்றார்.
முன்னதாக, இந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகத்தின் கடற்படை பிரிவு கமாண்டர் குமார் கூறுகையில், குஜராத்மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இங்கு செயல்படும் பள்ளி மாணவர்கள் நிதி வசூல் செய்வது மனதை மகிழ்ச்சியடையவைக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications