சென்னையில் துறவி அன்னமாச்சார்யா விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெருமாள் குறித்து ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள் பாடிய துறவி தலப்பாகா அன்னமாச்சார்யா விழா இரண்டு நாட்கள் சென்னையில்நடக்கவிருக்கிறது.

இது திருமலா - திருப்தி தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னை இசை அரங்கத்தில் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோஷ்டிகானம், இசை நிகழ்ச்சிகள் மூத்த இசைக் கலைஞர்களால் நடத்தப்படும் என திருமலா -திருப்பதிதேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யா விழாக் குழுவின் இயக்குனர் மேதாசானி மோகன் தெரிவித்தார்.

இந்த விழாவில் துவக்க நாளன்று அன்னமாச்சார்யாவின் சப்தகிரி சங்கீர்தனங்களை கலைஞர்கள் கோஷ்டிகானமாக இசைப்பார்கள். இந்த சங்கீர்த்தனங்களைதிருச்சூர் ராமச்சந்திரன் குழுவினரும், மூத்த இசைக் கலைஞரான பாலக்கிருஷ்ணாவும் பாடுவார்கள்.

திருமலா- திருப்பதி தேவஸ்தானம் அன்னமாச்சார்யா மற்றும் பல தலப்பாக புலவர்கள் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இந்தகருத்தரங்கம் சென்னை பல்கலைகழகத்தின் தெலுங்கு துறையின் உதவியுடன் நடைபெறும்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து பல அறிஞர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் ஆய்வறிக்கைகைள சமர்பிப்பார்கள் எனதிருமலா -திருப்பதி தேவஸ்தான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+