ஆயுத குவிப்பில் இந்தியா - பாக் தீவிரம்: சி.ஐ.ஏ.புகார்
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புத் திட்டங்களில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க புலனாய்வுத்துறை (சி.ஐ.ஏ)தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அளித்த, உலக நாடுகளின் ஆயுத தயாரிப்பு தொழில்நுட்பங்கள் பற்றிய அறிக்கையில், இதுபற்றி தெரிவித்துள்ள சி.ஐ.ஏ,பாகிஸ்தான் குறைந்த தூர அணு ஆயுத ஏவுகணைத் தயாரிப்பில் இறங்கியுள்ளதாக கூறியுள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திக்கு சீனா உதவி வருகிறது. ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானிற்கு அணு ஆயுதங்களைவிற்ற சீனாவிற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது.
பாகிஸ்தானிற்கு அணு ஆயுத விற்பனையோ, தொழில் நுட்ப உதவியோ அளிக்க மாட்டோம் என சீனா தெரிவித்த பிறகே அத்தடைகளை அமெரிக்காநீக்கியது. பாகிஸ்தானிற்கான சீன உதவிகள் தொடர்வதோடு, பல மேற்கு ஐரோப்பிய நாடுகள், பாகிஸ்தானிற்கு அணு ஆயுத தொழில் நுட்பங்களைஅளித்து வருகின்றன.
இந்தியாவும் அணு ஆயுத தயாரிப்பு திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுத தொழில்நுட்ப அறிவில் பின்தங்கியுள்ள இந்தியா, ரஷ்யா உள்ளிட்டநாடுகளிலிருந்து அவற்றை பெற்று வருகிறது.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என 2000ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான அறிக்கையில் சி.ஐ.ஏ.தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications