For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமாட்சி கோவிலில் ரகசிய யாகம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கறுப்பு குதிரை, கறுப்பு ஆடு போன்றவற்றிற்கு நடந்த ரகசிய யாகம்அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி கோவிலில் கடந்த மாதம் சென்னை மேயர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன்சென்று சாமி கும்பிட்டு விட்டுச் செனறார்.

இதையடுத்து, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உயிர்த்தோழிசசிகலாவும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று யாகம் நடத்தினார். அப்போது அவர் கையில் கொண்டு வந்தபெட்டி அனைவரையும் சந்தேகப்பட வைத்தது.

இதற்கிடையே, சசிகலாவைத் தொடர்ந்து ஜெயலலிதா சார்பில் காமாட்சி கோவிலில் யாகம் நடத்தப்பட உள்ளதுஎன வதந்தி பரவியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே கோவில் பிரகாரத்தைச் சுற்றி கட்சிப்பிரமுகர்கள், போலீஸார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வர ஆரம்பித்து விட்டனர். ஆனால் செவ்வாய்க்கிழமையாரும் யாகம் நடத்தவில்லை.

ஆனால் திங்கள்கிழமை இரவு யாருக்கும் தெரியாமல் ரகசிய யாகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கறுப்பு வேட்டி, துண்டு அணிந்த 10 க்கும் மேற்பட்ட அந்தணர்கள் யாகம் நடத்தினார்கள். அவர்களுடன்வந்திருந்த 2 பெண்களும் கருப்பு சேலை உடுத்தி யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகத்தில் கருப்பு தேன், கருப்புகயிறு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

எந்தக் கட்சிக்காக யாகம் நடத்தப்பட்டது என்பது குறித்து விவரம் தெரியவில்லை. மார்ச் 2 ம் தேதி வரை யாகம்நடக்கவிருப்பதால் பொதுமக்கள் யாருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் அனுமதி இல்லை என்று கோவில்நிர்வாகத்தார் கூறியுள்ளனர்.

கோவில் நிர்வாகத்தாரைக் கேட்ட போது, மழை வேண்டி யாகம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் இந்ததிடீர் யாகம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X