மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நூறு கோடி மக்களை இருபது நாட்களில் எண்ணி முடிக்கும் இமாலய சாதனையை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை நிறைவு செய்துள்ளது.

அதன் நிறைவு கட்டமாக புதனன்று இரவு ரோட்டோரங்களில் தங்கியிருக்கும் அனாதைகள், வீடற்றோர், பிச்சையெடுப்போர் ஆகியவர்கள் பற்றியதகவல்களை சேகரித்தனர்.

முதன்முறையாக இந்திய கணக்கெடுப்பின் போது ரோட்டோரங்களில் வாழ்வோரையும் கணக்கில் கொள்வதற்கு இம்முறை நடவடிக்கைஎடுக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி, கணக்கெடுப்பு பணிக்கு சென்ற பணியாளர்களுக்கு வினோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. பலர் தங்களை பற்றிய விபரங்களைதந்தாலும், சிலர் இவர்களை கண்டதும் விரட்டிவிட்டனர்.

25 வருடமாக எங்களுக்கு ஒன்றும் செய்யாத அரசாங்கத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றிருக்கிறார் ஒரு மூதாட்டி. அவரை பற்றியதகவல்களை அருகிலிருந்தவர்களிடம் கேட்டு குறித்து கொண்டார் சுரேந்தர் குமார் பட் என்ற கணக்கெடுப்பாளர்.

கணக்கெடுப்பின் போது கிடைக்கும் தகவல்களை வைத்து தங்களை போலீஸார் இரவு நேர தங்குமிடங்களிலிருந்து விரட்டியடிக்கக் கூடும் என பலர்பயப்படுகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தி தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது என்கிறார் பட்.

இக்கணக்கெடுப்பிற்கு பொறுப்பாளரான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவுத்துறை அதிகாரி ஆர்.ஜி.மித்ரா இது குறித்து கூறும் போது, புதனன்றுநள்ளிரவோடு கணக்கெடுக்கும் பணி முடிவடையும் என கூறப்பட்டிருந்தாலும், ரோட்டோரங்களில் தங்குபவர்கள் நள்ளிரவிற்கு மேல் தான் படுக்கவருவதால் கணக்கெடுக்கும் பணி கடைசி நபர் கணக்கிடப்படும் வரை நடந்தது.

1872 ல் தொடங்கிய இந்திய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி,

இடைவிடாமல் 14வது முறையாக தொடர்ந்துள்ளது. உலகிலேயே இந்தியாவில் மட்டுமே இடைவிடாமல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைகணக்கெடுக்கப்படுவதாக இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் ஜெயந்த் குமார் பந்த்யா தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+