For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனின் மூன்றாவது கூட்டாளி கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் காட்டுப்பகுதி அருகே, வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியும், தமிழர் தேசியமீட்புப் படையைச் சேர்ந்தவருமான மதி என்ற கிருஷ்ணமூர்த்தியை அதிரடிப்படை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.

அதிரடிப்படையில் உள்ள இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீஸார் இவரைக் கைது செய்தனர்.அவரிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகள், போலராய்டு கேமரா, மைக்ரோ கேஸட் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

இதுகுறித்து அதிரடிப்படை ஐ.ஜி.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி,வீரப்பனுடன் சேர்ந்து கொண்டார். பின்னர் வீரப்பனிடமிருந்து பிரிந்து திண்டுக்கல் சென்றார்.

கடந்த பிப்ரவரி 2 ம் தேதி வீரப்பன் கும்பலுடன் சேர்ந்து இவரும் அதிரடிப்படையினர நோக்கித் துப்பாக்கியால்சுட்டதை இவர் ஒத்துக் கொண்டுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் முதலில் நான், தமிழ்நாடு மீட்புப்படையை விட்டு வெளியேறி எனது சொந்த ஊரானதிண்டுக்கல்லுக்குச் சென்றேன். பின்னர் தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறன் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நான் காட்டுக்கு வந்தேன். அப்போது போலீஸார் என்னைக் கைது செய்தனர் என்றுவாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்படுவார் என்று தனது அறிக்கையில்கூறியுள்ளார் பாலச்சந்திரன்.

முன்னதாக, முதலில் வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறன் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகுசேத்துக்குளி கோவிந்தன் கைது செய்யப்பட்டார் என்று வதந்தி பரவியது. அந்தத் தகவலைப் போலீஸார் மறுத்தனர்.இதையடுத்து, வீரப்பனின் இன்னொரு கூட்டாளி சாரையன் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் என்பதுநினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X