காளிமுத்து மீது குற்றப்பத்திரிக்கை
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான காளிமுத்துவை அலைக்கழித்து வந்த ராபின்மெயின் வழக்கில் அவர் மீது சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழகத்தை உலுக்கிய இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர்காளிமுத்துவின் நெருங்கிய நண்பரான ராபின் மெயின் என்பவர் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவாகனங்களை, தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகளின் உதவியுடன் தமிழக வாகனங்களாக காட்டிவங்கிகளில் கடன் பெற்றுள்ளார். இந்த வகையில் பல்வேறு வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 56 லட்ச ரூபாய் எனசி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னாள் அமைச்சர் காளிமுத்துவும் உடந்தை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரிக்கதடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. அதனை தொடர்ந்து சென்னை முதன்மை சி.பி.ஐ.நீதிமன்றத்தில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது தான் குற்றவாளி இல்லை என காளிமுத்துகூறினார்.
முன்னதாக இந்த வழக்கிலிருந்து அரசு நடவடிக்கைகளை தவிர்க்க அ.தி.மு.க.விலிருந்து 1989 ல் தி.மு.க. ஆட்சிவந்ததும் தி.மு.க.விற்கு தாவினார் காளிமுத்து.
பின்னர், 1991ல் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதும், மீண்டும் அ.தி.மு.க.விற்கு தாவியவருக்குமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடைக்கலம் கொடுத்து அ.தி.மு.க. நிர்வாகியாக நியமித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications