பொள்ளாச்சியில் டெட்டனேட்டர் கும்பல் கைது

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே பெருமளவில் ஜெலாட்டின், டெட்டனேட்டர்களை உரிமமின்றி எடுத்துச் சென்ற வாலிபர்கைது செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பைக்கில்வேகமாக ஒரு வாலிபர் சென்றார். அவரைத் தடுத்தும் நிறுத்ததால், சந்தேகமடைந்த போலீசார் விரட்டிச் சென்றுபிடித்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய சோதனையில் ஒரு பெட்டியில் 1117 ஜெலாட்டின் குசிசிகள் 384 டெட்டனேட்டர்கள்ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

மேலும், மோட்டார் சைக்களில் வந்த வாலிபர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (26) என்பதுவிசாரணையில் தெரிய வந்தது.

இவரிடம் நடத்திய விசாரணையில், சங்கம்பாளையத்தைச் சேர்ந்த செல்வம் (30), மாக்கினம்பாளையத்தை சேர்ந்தகிருஷ்ணராஜ் (35), குன்னத்தூர் கணபதிபாளையம் கருப்புச்சாமி (35), ஆகியோரைக் கைது செய்தனர்.

இவர்களிடம் கம்ப்ரசர், டிரக்டர்கள் ஆகியவை உள்ளன. இந்த ஜெலட்டின் குச்சிகளை பாறைகளை உடைக்கப்பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் ஜெலட்டின், டெட்டனேட்டர்களை வைத்திருக்க உரிமம் பெறவில்லை.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+