நீதிமன்றத்தில் கைதிகள் கலாட்டா

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை தொடர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட 165 கைதிகள், நீபதிபதி வர காலதாமதம் ஆனதால் திடீர் கோஷமிட்டனர். நீதிமன்றத்தில் இருந்தபெஞ்சுகளை உடைத்தனர்.

கோவையில் கடந்த 98ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பம் தொடர்பாக 167 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில்நடந்து வருகிறது. நீதிபதி தணிகாசலம் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

கோவை அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி ஆகியோர் உள்பட குண்டு வெடிப்பு கைதிகள்அனைவரும் கோவை சிறையில் உள்ளனர். இவர்களுக்கு வசதியாக சிறை வளாகத்திற்குள்ளேயே தனி நீதிமன்றம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணை காலை 10 மணிக்குத் துவங்குவதாக இருந்தது. இன்றைய விசாரணையில் குற்றச் சாட்டு பதிவுமேற்கொள்வதாக இருந்தது. இதற்காக கைதிகள் 164 பேரும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த தயார் நிலையில் அவர்களுக்கெனஉருவாக்கப்பட்ட சிறையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

காலை 11 மணி அளவில் தயார் நிலையில் இருந்த கைதிகள், மதியம் 2 மணி வரை நீதிபதி தணிகாசலம் இருக்கைக்கு வராததால், ஆத்திரமடைந்துகோஷமிட்டனர். பின்னர், பொறுமை இழந்த கைதிகள், நீதிமன்றத்திற்குள் இருந்த பெஞ்சுகளை போட்டு உடைத்தனர்.

பின்னர் 2 மணி அளவில் நீதிபதி தணிகாசலம் நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிபதி தணிகாசலம், குற்றப் பதிவை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துஉத்தரவிட்டார். எனவே மீண்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு வரும் 20ம் தேதி நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+