கூட்டணி: 2 நாட்களில் காங்கிரஸ் முடிவு
பெங்களூர்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து காங்கிரஸ் இன்னும் இரண்டு நாட்களில் காங்கிரஸ் முடிவு செய்யும்என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னான்டஸ் பெங்களூரில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் ஆஸ்கர் பெர்னான்டஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
விரைவில் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட்டு அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக வுடன் கூட்டணி வைத்திருப்பது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது என்றார்.
முன்னதாக, பேட்டியின்போது உடனிருந்த காங்கிரஸ் உறுப்பினர் மோதிலால் வோரா கூறுகையில், மேற்கு வங்காளத்தில் தேர்தலில் வெற்றி பெறகாங்கிரஸ் நன்கு பணியாற்றி வருகிறது.
மேற்கு வங்காள மக்கள், காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார்.
யு.என்.ஐ.