சிறையில் கலாட்டா: 5 போலீசார் மீது நடவடிக்கை
கோவை:
சிறைவாசிகளிடமே "ரவுடித் தனம் செய்த 5 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவை மத்திய சிறை பழமை வாய்ந்த சிறையாகும். இந்த சிறை இப்போது சீர்திருத்தக் கூடமாக மாறி வருகிறது. சிறையில் இருப்பவர்களும் நாட்டின்குடிமக்களாக கருதப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய சிறையில் கைதிகளை காண வரும் உறவினர்களிடம், கைதிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்ட 5 இரண்டாம் நிலைக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்கடந்த சில காலமாக முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவலர் சக்திவேல் என்பவர் சுபாஷ் என்ற சிறைவாசியை நேர்காணலுக்கு வந்த அவரது தங்கையிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இதே போல் செந்தில்குமார் மற்றும் சி. செந்தில்குமார் ஆகிய இரண்டு போலீசார் சிறைவாசி தங்கம் என்பவரைத் தாக்கியுள்ளனர். எஸ்.வடிவேல்,முத்துப் பாண்டி என்ற இரு காவலர்களும், ஏ வகுப்பு சிறையில் இருக்கும் ஸ்ரீதரன் என்பவரிடம் தரக் குறைவாக நடந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் ஏனைய காவலர்களையும் அழைத்துச் சென்று ரவுடிகளைப் போல செயல்பட்டு சிறைவாசிகளைத் தாக்கியுள்ளனர். இவர்கள் மீது உரிய இலாகாபூர்வமாக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications