த.மா.கா, காங்கிரசுக்கு 45 இடங்கள்: ஜெ.அறிவிப்பு
சென்னை:
தமாகா, காங்கிரஸ் கட்சிகளுக்கு 45 இடங்களும், பாண்டிச்சேரியில் முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத் தரத் தயார் என்றும் அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஒரு கட்சியுடன் கூட்டணி முடிந்து விட்டது. இதனால் மற்ற கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன என்று அர்த்தம் அல்ல. பிற கட்சிகளுடன் தொடர்ந்துபேச்சு நடந்து வருகிறது.
தமாகா, காங்கிரஸ் கட்சிகளுக்கு 45 இடங்கள் கொடுக்கத் தயாராக உள்ளோம். அவர்கள் இதைப் பகிர்ந்து கொள்ளலாம்.
சுழற்சி முறையில் பாமகவும், அதிமுகவும் பதவியைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. இதில் அதிமுகவின் பங்கை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கத்தயாராக இருக்கிறோம்.
அதிமுக நிலை குறித்து மூப்பனாரிடம் தெளிவாகத் தெரிவித்து விட்டேன். காங்கிரஸ் சார்பாகவும் மூப்பனார் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடன் நேரிடையாகபேசவும் நான் தயார் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications