தி.மு.க. வில் புதுவை கண்ணன்
சென்னை:
பாண்டிச்சேரி முன்னாள் உள்துறை அமைச்சரும், புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கண்ணன்தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்.
கண்ணன் பாண்டிச்சேரியில் தமிழ் மாநில கட்சியிலிருந்து விலகி புதுவை மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதியகட்சியை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. கட்சி தலைவருமான கருணாநிதி பாண்டிச்சேரிக்கு சென்றிருந்த போது தான்தி.மு.க. தலைமையிலான அணியில் இணைந்து பாண்டிச்சேரி தேர்தலில் போட்டியிட இருப்பதாகதெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, கண்ணன் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது கோபால புரம் இல்லத்தில் புதன்கிழமைசந்தித்து சுமார் 30 நிமிட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதன் பின் நிருபர்களிடம் கண்ணன் கூறுகையில், எங்கள் கட்சி தி.மு.க. எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும்ஏற்றுக் கொள்ளும். தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு எங்கள் கட்சி பாடுபடும்.
தி.மு.க.யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். பாண்டிச்சேரியின் முதல்வராகஜானகிராமன் இருந்தபோது நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன் என்றார்.
இது குறித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில், புதுவை மக்கள் காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் இணைந்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
இடதுசாரி கட்சிகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணையுமா என்பது பற்றி இப்போது எதுவும் கூறமுடியாது. ஏனென்றால் தெளிவான நிலை காணப்படாததால் அது பற்றி கருத்து கூற முடியாது.
த.மா.கா. எந்த விதமான முடிவும் எடுக்காமல் இருக்கிறது .தி.மு.க. எதிரணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றிகவலைப்படாது. நாங்கள் எங்கள் கூட்டணியை பலப்படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications