ஆப்கான் புத்தர் சிலையின் தலை தகர்ப்பு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் பாமியானில் உள்ள 2000 ஆண்டு பழமை மிக்க இரண்டு புத்தர் சிலைகளில் ஒன்றின் தலைப்பகுதியை தலிபான் ஆதரவாளர்கள் வெடி வைத்ததுத்தகர்த்தனர் என்று ஆப்கானிஸ்தானில் வெளியாகும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் வெளியாகும் பத்திரிக்கைச் செய்தி விவரம்:
புத்தர் சிலையின் தலையை தகர்ப்பதற்காக தலிபான் தீவிரவாதிகள் அதிக அளவு வெடி பொருட்களைப் உபயோகப்படுத்தினர். முன்னதாக பாமியான்பாலைவனத்தில் உள்ள இரண்டு புத்தர் சிலைகளில் ஒன்றின் கால்பகுதி ஏற்கனவே தலிபான் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு விட்டன.
தற்போது புத்தர் சிலையின் நடுப்பகுதி மட்டுமே தகர்க்கப்படாமல் உள்ளது. பாமியான் நகரில் உள்ள இரண்டு பெரிய புத்தர் சிலைகளும் உடைக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
பாமியான் நகரில் 53 மீட்டரிலும், 38 மீட்டரிலும் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் உள்ளன. மலை முகடுகளில் உள்ள இந்த இரண்டு சிலைகளும் 2000ஆண்டுகள் பழமை மிக்கதாகும்.
இவ்வாறு பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
முன்னதாக, இஸ்லாம் மதச் சட்டப்படி சிலை வழிபாடு கூடாது என்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து புத்தர் சிலைகளையும் தகர்க்குமாறு ஆப்கானிஸ்தானைஆளும் அதிபரும், தலிபான் தீவிரவாதிகள் தலைவருமான முகமது ஓமர் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications