விழாவில் பேசும்போது வந்த உத்தரவு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு வீடு கட்டும் சங்க வணிக வளாக புதிய கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் முல்லைவேந்தன் பேசிக் கொண்டிருந்த போது அவருக்குராஜினாமா உத்தரவு கிடைத்தது.
தலைமைச் செயலக செய்தித்துறை பி.ஆர்.ஓ. மூலம் முல்லைவேந்தனுக்கு ராஜினாமா உத்தரவு அனுப்பப்பட்டது.
ராஜினாமா உத்தரவைப் படித்ததும், அதிர்ச்சியடைந்த முல்லைவேந்தன் பேசுகையில், நான் கலந்து கொள்ளும் கடைசி விழா இது. நான் விரைவில் பேச்சைமுடிப்பதற்கான காரணம் குறித்து நீங்கள் பின்னர் தெரிந்து கொள்வீர்கள்.
நான் நிரபராதி. நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவதுதான் இன்றைய நிலை. என்னை அமைச்சராக்கிய முதல்வர் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும்நன்றி. இதே போல் மாவட்ட வளர்ச்சிக்கு கடந்த 5 ஆண்டுகளாக உதவிய அனைவருக்கும் எனது நன்றி என்று கூறி விட்டுப் புறப்பட்டார்.
பின்னர் கிருஷ்ணகிரி விருந்தினர் விடுதிக்குச் சென்று, அரசு சார்பில் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கார்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் மாவட்டகலெக்டர் பொறுப்பில் உடனடியாக ஒப்படைத்தார். (ரொம்ப நியாயமானவராம்!).
முல்லைவேந்தனின் அரசு விழாக்கள் ரத்து:
முல்லைவேந்தனுக்கு ராஜினாமா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளவிருந்த அரசு விழாக்கள் அனைத்தும்ரத்து செய்யப்பட்டன.
முதல்வர் உத்தரவு:
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தர்மபுரியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில் செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தன் முன்னிலையில்,அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அன்புமணி என்பவர் தாக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
இதுகுறித்து விசாரித்துத் தெரிவிக்குமாறு மாநில குற்றப் புலனாய்வுப் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தேன். விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தேன்.
அதன்படி எனக்குக் கிடைக்கப் பெற்ற (வியாழக்கிழமை) விசாரணை அறிக்கையின்படி, அன்புமணி மீதான தாக்குதலுக்கு முல்லைவேந்தன்காரணமாக இருந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் மற்றொரு அமைச்சரின் துறையில் (அறநிலையத்துறை) தலையிட்டு அத்துறை சார்பில்நடக்கவிருந்த நில ஏலத்தையும் தடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
எனவே உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு முல்லைவேந்தனுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications