ஸ்டாலினின் ஊட்டி பயணம் ரத்து
கோவை:
தந்தை கருணாநிதியுடன் சேர்ந்து தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சியின் தலைவர்களை சந்தித்து வரும் மு.க.ஸ்டாலின் தனது நீலகிரி மாவட்ட சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
முதலில் தனித்து விடப்பட்ட த.மா.கா-காங்கிரஸ் இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம் பிடிக்க உள்ளதால், தி.மு.கவும்தனது தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளது. முடிந்தவரை பல கட்சிகளையும் வளைத்துப் போடும்முயற்சியில் அக் கட்சி ஈடுபட்டுள்ளது.
இதில் தந்தை கருணாநிதிக்கு சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் பெரிதும் உதவி வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் மு.க ஸ்டாலின் 3 நாள் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்திருந்தார். இதன்படி அவர் சனிக்கிழமையன்று(மார்ச் 10), காலை நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் கோவை வருவதாக இருந்தது.
கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி செல்ல முடிவு செய்திருந்தார். நீலகிரிமாவட்டத்தில் 3 நாள் சுற்றுப் பயண நிகழ்ச்சி இருந்தது.
ஆனால், தலைநகர் சென்னையில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது பயணம் ரத்துசெய்யப்பட்டது.
முதல்வர் கருணாநிதி, சில முக்கிய அரசியல் ஆலோசனைகளுக்கு ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன்படிஅவரது சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது கூட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications