சூறாவளிக்கிடையே ஒரு தென்றல்
சென்னை:
கடுமையான அரசியல் சூறாவளிக்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வீட்டில் தென்றல் வீசியது.
அதிமுக கூட்டணி, ப.சிதம்பரத்தின் எதிர்ப்பு, 3-வது அணிக்கான பிரஷர் என கடந்த ஒரு மாதமாகவே மூப்பனார் பயங்கர பிசியாக இருந்தார்.சமீபத்தில்தான் அதற்கு ஒரு முடிவு ஏற்பட்டது.
கடுமையான அரசியல் பணிகளுக்கிடையே அவரது வீட்டில் புதிதாக ஒரு வரவு வந்துள்ளது. அவரது மகன் வாசனின் மனைவி கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு திங்கள்கிழமை சென்னை இசபெல்லா மருத்துவமனையில் மகன் பிறந்தான்.
பேரன் பிறந்த செய்தியை அறிந்த மூப்பனார் உடனடியாக இசபெல்லா மருத்துவமனைக்கு விரைந்து வந்து பேரனைப் பார்த்து மகிழ்ந்தார். மருமகளுக்குவாழ்த்துக் கூறி விட்டுச் சென்றார்.
தங்களது குடும்பத் தலைவர் அரசியல் சூட்டில்தகித்துக் கொண்டிருப்பதை கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த மூப்பனார் குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரும்வகையில், அவருக்குப் பேரன் பிறந்துள்ளான்.












Click it and Unblock the Notifications