புதிய தமிழகத்துடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சு
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், தமிழர் பூமி, தொண்டர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன்திமுக தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்துகின்றனர்.
திமுக கூட்டணியில், தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இதுவரை பா.ஜ.க., மதிமுக , எம்.ஜி.ஆர். அதிமுக, எம்.ஜி.ஆர். கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியகட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மட்டும் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மேலும் 3 கட்சிகளுடன் திமுக குழுவினர் செவ்வாய்க்கிழமை பேசுகின்றனர். முதலில் புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் அவர்கள் பேசுகின்றனர். புதிய தமிழகம் தரப்பில், டாக்டர்கிருஷ்ணசாமி, பழனிக்குமார், வேலுச்சாமி, துரையரசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
திமுக குழுவில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
புதிய தமிழகம் தவிர கு.ப. கிருஷ்ணனின் தமிழர் பூமி, குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸ் ஆகியகட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக குழு பேசுகிறது.