சீன வாகன விபத்துகள் வெளியிட தடை?
பெய்ஜிங்:
சீனாவின் மலைப்பகுதி விபத்துகள் பற்றி செய்திகள் வெளியிட அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், அப்பகுதிகளில் நடைபெறும் பல்வேறுவிபத்துகள் பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைப்பதில்லை.
தற்போது சீன அரசின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் ஒன்று நீர்த்தேக்கத்தில்விழுந்தது.
இதில் பயணம் செய்த 26 பேரில் 22 பேர் உயிரிழந்தனர். காயமடைந்துள்ள மற்ற 4 பேர் இன்னும் கோமா நிலையில் இருக்கின்றனர் எனதெரிவிக்கிறது. விபத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை.
எனினும், விபத்தில் பலியான மினி பஸ்ஸின் டிரைவரே விபத்திற்கு காரணம் என போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து எப்போது நடந்தது என்பதுபற்றிய தகவல் இல்லை.
சீனாவின் மலைப்பிரதேசங்களில் உள்ள சாலைகள் வாகன போக்குவரத்திற்கு ஏற்றவையாக இருப்பது இல்லை. வாகனங்களின் பராமரிப்பும் குறைவாகஇருக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் போது இம்மாதிரி விபத்துகள் நிகழ்கிறது.