Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வள்ளுவர் கோவிலுக்கு 21-ம் தேதி கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம் 21-ம் தேதி காலை நடக்கிறது.

திருக்குறள் எழுதி புகழ் பெற்ற திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தார் என்று ஒரு வரலாறு உள்ளது. வள்ளுவர்,கன்னியாகுமரியில் பிறந்தவர் என்றும் ஒரு கருத்து உள்ளது.

மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலைக் கட்டியது காசி அரசன் என்ற மன்னன்.சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது இந்தக் கோவில்.

இந்தக் கோவிலின் உள்ளே வள்ளுவர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் இலுப்பை மரம் உள்ளது. அதன்அடிப்பாகம் செப்புத் தகடு போர்த்தி இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பழமையான இந்தக் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது.இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி மாநில அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன்ரூ. 5.6 லட்சம் மதிப்பிலான திருப்பணிகளைத் துவக்கி வைத்தார்.

இதில் ரூ. 3 லட்சம் மதிப்பில் முதல் கட்டப் பணிகள் முடிந்துள்ளன. திருவள்ளுவர், வாசுகியம்மன் கோவில்விமானங்கள், ஏகாம்பரேஸ்வர் காமாட்சியம்மன் கோவில் விமானங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன.பணிகள் முடிவுற்றள்ளதையடுத்து, 21-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

காலை 11.30 மணிக்கு இந்த விழா நடக்கும். அதற்கு ன் 19-ம் தேதி திங்கள்கிழமை 20 சிவாச்சாரியார்கள்தலைமையில் வேத பாராயணம், திருறை பாராயணம் ஆகியவை நடத்தப்படும்.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ந.பூ.ராமஜெயம் உள்ளிட்டபலர் கலந்து கொள்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+