ராஜினாமாவை வாபஸ் பெற்ற 3 அமைச்சர்கள்
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது கட்சியான சமதா கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் தங்களதுராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ராஜினாமா செய்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ்குமார், ரயில்வேத்துறை இணை அமைச்சர் திக் விஜய்சிங், நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் சீனிவாசப் பிரசாத் ஆகியோர் தங்கள் ராஜினாமாவை வாபஸ்பெறுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் 3 பேரும் சமதா கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து சமதா கட்சி நிறுவனத் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக வேண்டாம் என்றும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டாம் என்றும் சமதா கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்களுக்கும் கூறப்பட்டது.
இதுகுறித்தான ஆலோசனையும் நடத்தப்பட்டது. அவர்களிடம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துத்தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள், தங்கள் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டுதேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறினார்.
முன்னதாக, டெஹல்கா டாட் காம் இணையதளம் அம்பலப்படுத்திய ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டைத்தொடர்ந்து சமதா கட்சி நிறுவனத் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்தார். இதையடுத்து மார்ச் 15 ம்தேதி சமதா கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications